Tuesday, May 31, 2011

சூப்பர் ஸ்டாருக்கு ஓர் மடல் ...












உம்மை பற்றி
வதந்தி பரப்பும்
வக்கற்ற மனிதர்களுக்கு
விளம்பரம் தேட வேறு
வழி இல்லையா? உம்மை
தான் இழுக்க வேண்டுமா ?

சிங்கப்பூர் செல்லும் முன்
உமது மகள் வெளியிட்ட
குரல் கேட்டு கலங்கிய
ரசிகர்களில் நானும்
ஒருவன் ..

உனது கம்பீர குரல்
காணமல் போய்
உடல் நலிந்த
நிலையில் உமது குரல்
கேட்டு நொறுங்கி
அல்லவா போனோம்
நாங்கள் ...

இனி உம்மை
வருத்தி எங்களை
மகிழ வைக்க வேண்டாம்
எந்திரனாய் நீ மாற
பட்ட கஷ்டங்களை
அறிந்தோம்

"ரானா " வாக மாறி
ரணப்படுவதை
விட உமக்கேற்ற
வேடங்களில்
உடல்நிலை பாதிக்காத
வேடங்களில் நடிக்க
வேண்டும் என்பதே
கோடானுகோடி உண்மையான
ரஜினி ரசிகனின் விருப்பம் ...

ஒன்றுமில்லை
ஒன்றுமில்லை என கூறி
சிங்கப்பூர் கொண்டு சென்றது
ஏன் ?
உண்மை நிலை விளக்கிடு
பூரண குணம் பெற்ற பிறகு ..

நீர் யானை அல்ல
விழுந்தால் எழ முடியாமல் போக ...
நீர் குதிரை
விரைவில் எழுவீர்
பூரண உடல் நலத்துடன் ...

Tuesday, May 17, 2011

கலைஞருக்கு ...



முதுமைக்கு ஓய்வு தந்த
இளைஞா !
கலைஞா! உமக்கு ஓய்வு
தர இம்மக்கள்
நினைத்தது
ஏன் ?

உடன்பிறப்புகள்
உயிர் எடுத்த கதை அறிந்தாயா
முதல்வா !
முதல்வா என முழங்க
முடியாதோ இனி ..

மின்சார வெட்டும்
அலைகற்றை ஊழலும்
தான் உன்னை வீழ்த்தியதை
அறிந்தாயா ? எத்தனை
சாணக்கியன் நீங்கள்
இதனை தீர்க்க இயலாமல்
போனது ஏன் ?


இலவசங்கள்
வாங்கி கொண்டு உம்மை
இல்லாமல் செய்து விட்டனரே
இம்மக்கள்



108 திட்டம் மூலம் பல
உயிர் காத்து மகிழ
செய்தாயே !
மறந்தனரே மக்கள்


கலைஞர் காப்பீடு
திட்டம் மூலம் உயர் சிகிச்சையை
இலவசமாய் தந்து
இன்னுயிர் தந்தீரே பலருக்கு ..
மறந்தனரே! இம்மக்கள் ..


மாற்றம் வேண்டுமென்று
வாக்களித்த மக்கள்
மாற்றம் காண்பர் இன்னும் சில
வருடங்களில் .....
உம்மை ஏன் அகற்றினோம் என்று ...