Tuesday, August 16, 2011

நித்தம் சொல்லும் பொய்களில்...























யாரும்
தனக்கு பிடித்து
சொல்வதில்லை பொய்களை ..
நித்தம் சொல்லும் பொய்களில்
எனக்கு பிடித்த பொய்
எதுவென்று தேடி பார்த்தேன் ...



காதல்
கவிகளில் சொல்லும்
பொய்கள் கவிதைக்கானவை
பிடித்தும் பிடிக்காத
பொய்கள் பல உண்டு
அதில்..

எந்த பொய்யும்
எனக்கு பிடிக்க வில்லை
தேடி பார்த்ததில் ஒன்றை தவிர ...

என் உடல் நிலை சரியில்லை
என்றாலும்
என் தாய் என்னிடம்
தொலை பேசியில்
கேட்கின்ற பொழுது
நலமாக இருக்கிறேன் என்று
என் தாய் மனது
மகிழ நான் சொல்லும்
பொய் மட்டுமே !




Sunday, August 14, 2011

முதல் இடம் இழந்த இந்தியா

அந்தோ பரிதாபம் !
உலக சாம்பியன் என்று
மார்தட்டி நடந்தவர்கள்
தலைகுப்புற விழுந்ததை
பார்த்தீரா!

தோனியின் படை
புறமுதுகு இட்டு ஓடியது
ஏன் ?
மேற்கிந்திய தீவுகள்
அணியிடமே
திணறி வெற்றி பெற்ற போது
நாம் முதல் இடத்துக்கு
தகுதியா என்ற
கேள்வி எழாமல் இல்லை

இப்போது இங்கிலாந்து 3-0
என்ற கணக்கில் நம்மை
வீழ்த்தி வெற்றி
கூப்பாடு போடுகிறது ..
நம்மால் 300 ரன்களை
கூட ஒரு இன்னிங்க்சில் எடுக்க
முடியவில்லையே !

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில்
முதல் இடத்தை இழந்து
விட்டோம் அடுத்த
நான்காவது டெஸ்டிலும்
தோற்றால் மூன்றாம்
இடம் தான் !

அதிக போட்டிகள் தான்
வீரர்களை காயம் அடைய
செய்கிறது என்றால் IPL இல்
அதிக போட்டிகள் தானே
அங்கு எப்படி விளையாடுகீறீர் !

தேசத்திற்கு எதிரான
போட்டிகளில் ஓய்வு
எடுத்து விட்டு IPL இல்
விளையாடுவது முறை தானா!

தோனி மீண்டும் பழைய
நிலைக்கு வந்து இருப்பது மட்டுமே
அறுதல் இந்த டெஸ்டில் ..

ஆறுதல் வெற்றியாவது
பெறுவீரா பார்ப்போம்
நான்காவது டெஸ்டில் ...