Friday, March 1, 2013

"தற்கொலை" தீர்வாகுமா ?

suicide
யார் உனக்கு உரிமை
தந்தது தற்கொலை செய்ய?

தன் குருதி சிந்தி
இன்னுயிர் நடுங்கி
உன்னை  பெற்றடுத்த தாய்க்கு
மீண்டும் அவள் உயிர் நடுங்க
உன் உயிர் நீக்கினாயே ஏன் ?



கோழைகள்  தான்
தற்கொலை செய்வர்
நீ வீரன் அல்லவா நினைத்தேன்
நான்

உனக்குள்ள துக்கங்கள்
உன் சாவினாலே போகும்
என நினைத்தாய் நீ !
உன் குடும்பம் படபோகும்
அல்லல் நினைத்து
பார்த்தாயா அந்த முடிவை
எடுக்கும் போது ..

அரசு உத்தியோகதிற்காய்
அல்லும் பகலும்
உழைத்தாய்-வெற்றி கொண்டாய்
இப்போது உன் உழைப்பெல்லாம்
வீண் ஆக்கி விட்டாயே

எனக்கு தற்கொலை
செய்பவர்களை பிடிப்பதில்லை
இப்போது நீயும் ....


-எனது பள்ளி பருவ நண்பன் ஒருவன் இன்று தன் உயிரை தானே போக்கினான்.அவனுக்கு எனது அஞ்சலிகள்.இறந்தவர்களை விமர்சிக்க கூடாது எனினும் என்னால் முடிய வில்லை.


                                                                                -கனத்த இதயத்துடன் -
                                                                                        பிரேம்குமார் .சி 

உங்கள் பார்வைக்கு :