Sunday, May 26, 2013

சச்சினின் இறுதி IPL- வெற்றியுடன் ..சென்னை சூதாட்டமா ?


சூதாட்டம் ,MATCH  FIXING ,SPOT FIXING  என பல விசயங்கள் அடிபட்டாலும் 
இறுதி போட்டிக்கு வந்த கூட்டத்தை பார்க்கும் போது இந்தியன் இந்தியன் தான் போங்க என தோன்றுகிறது .
  • மும்பை அணிக்கு எதிரான இன்றைய இறுதி ஆட்டத்தில்149 ரன்களை இலக்காக கொண்டு விளை யாடிய சென்னை சீட்டுகட்டுகள் போல அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 125/9 எடுத்து தோல்வி யடைந்தது .தோணி மட்டும் 63 ரன்கள் எடுத்தார் 
  • இதுவரை நடந்த ஆறு சீசன் களில் 5 இல் இறுதி போட்டியில் இருந்திருக்கிறது சென்னை .அதில் இரண்டை  வென்று உள்ளது 
  • எப்போதும் சிறந்த OPENING இன்னிங்க்ஸ் தரும் ஹஸ்ஸி 0 எடுத்து வெளியேறவும் சென்னை அவ்வளவு தான் என முடிவாயிற்று .யார் கண்டார் இந்த போட்டியிலும் SPOT FIXING  நடந்ததோ என்னவோ ?
  • சச்சின் தனது கடைசி IPL இது என நேற்று தெரிவித்தார் .இது மிக சரியான முடிவு .ஆனால் டிராவிட் IPL இல் சிறப்பாக விளையாடி வருவது கவனிக்கத்தக்கது 
  • சில புள்ளி விவரங்கள் கீழே :


கொசுறு :

முன்னதாக விக்கெட்டுகள் விழுந்தாலும் சென்னை வென்று விடும் என்ற நினைப்பில் நான் EDIT செய்த போட்டோ கீழே .அதில் 3TITLES என்பதற்கு பதில் 2 TITLES என்று மாற்றினால் சரியாக இருக்கும் என நினைக்கிறேன் .

பதிவின் தலைப்பு கூட இப்படி வைத்து இருந்தேன் IPL 7:சென்னை VS ? கணிப்பு இப்போதே !

CSK WON IPL 6



Friday, May 17, 2013

"சூது கவ்வியதா" ஸ்ரீசாந்த் ?


இறுதி ஓவர்
என்ன நடக்கும்
தேவை 20 ரன்
இருப்பதோ ஆறு பந்துகள்



கடைசி பந்து வரை
பரபரப்பு

நகம் கடித்து
இருக்கை  நுனியில் வந்து
உற்சாகமாய்
நம் வேலை விட்டு
தொலை காட்சி முன்
அமர்ந்தால்!
தோல்வி அடைந்த   அணி
வீரர்கள் செய்தது
மேட்ச் பிக்சிங்
என்று தெரிய வந்தால்?

 நம்மை
முட்டாள் அல்லவா
ஆக்குகிறார்கள்
இவர்கள் !
பெர்னாட்சா கூற்று
சரி தானோ !


ஹர்பஜனுடன் ஆக்ரோஷம்
களத்தில் ஆக்ரோசம்
எல்லாமே நடிப்பா-இல்லை
அதுவும் சூதா
ஸ்ரீசாந்த்

செய்தி :ஸ்பாட்  பிக்சிங் காரணமாக ராஜஸ்தான் அணி வீரர் ஸ்ரீஷாந்த் உட்பட 3 பேர் கைது