Monday, January 31, 2011

தமிழா ! தமிழா !

மீன் பிடிக்க
சென்ற எம்
தமிழனை மீனவனை மீன்
போல கொத்தி சுருக்கு கயிறு
மாட்டி கொன்ற அற்ப பதர்களே !
எம் தமிழனை கொன்றால்
யார் கேட்பார் என நினைத்தீர்களா ?
உங்களை சொல்லி குற்றமில்லை

கடிதம் எழுதுவதும்
கட்டி அணைத்து
கண்ணீர் துடைப்பது போல
நடிப்பதும் மட்டுமே எங்கள்
அரசியலார்களின்
வேலை என்பதை
தெரிந்து இருக்கிறீர்கள்

தமிழன் கேவலபடுவதும்
தமிழ் கேவலபடுவதும்
எங்களுக்கு புதிதல்ல
என்று நினைத்தீரோ !

ஈழ தமிழனை சாக
விட்டு வேடிக்கை பார்த்த
இந்தியா அரசு இதிலும்
வேடிக்கை பார்க்கிறதே !

ஆஸ்திரேலியாவில்
சில மாணவர்கள் தாக்க பட்டதற்கே
துடிதுடித்தீரே நாங்களும்
இந்தியர் தானே பிறகேன் இப்படி?


(இந்த கவிதையை எழுத தூண்டிய அன்பர் செந்தழல் ரவிக்கு நன்றி ! மேலும் மீனவர் பிரச்சனை பற்றி அறிந்து கொள்ள கிளிக்குங்கள் )