Wednesday, October 26, 2011

ஒஸ்தி-உசத்தியா ?-- பாடல்கள் ஓர் அலசல்

சிம்புவின் ஒஸ்தியில் மொத்தம்  5 பாடல்கள், 4  குத்து ஒரு மெலடி டைப்பில் அனைவரையுமே   கவரும் வண்ணத்தில் உள்ளது .பாடல்கள் மற்றும்  நான் ரசித்த வரிகள் மற்றும் பாடலின் இணைப்பு  சுட்டியும்   கீழே !

வாடி வாடி க்யூட்  பொண்டாட்டி ..

ஒஸ்தி  நாயகி ரிச்சா

சிம்பு எழுதி பாடியுள்ள இப்பாடல் முதலில் கேட்ட  மாத்திரமே பிடிக்கின்ற ஆட வைக்கின்ற பாடல் ..பொண்டாட்டிக்கு என்னவெல்லாம் செய்வார் என்பதை பாடலாக  எழுதி உள்ளார் .எவன்டி உன்ன பெத்தான் வானம் பட பாடல் ரகம் இது ..

பாடலில்  நான் ரசித்த வரிகள் ..

"வாடி வாடி வாடி  என் கியூட் பொண்டாட்டி நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி  வாடி வாடி வாடி  என் ஹாட்  பொண்டாட்டி.."
என தொடங்குகிறது

உனக்கு முன்னாடி  சத்தியமா என் என் உசிரு என்ன விடாது ஏனா நான் போயிட்டா உன்ன யார் பார்த்துப்பா ?  

- என மனைவியை ஐஸ் வைக்கும்   வரிகள் பல ..

சிம்புவின் வசீகரிக்கும் குரலை கேளுங்கள் 



கலா சலா கலசலா ...
 
சிம்பு ரொம்ப கஷ்டப்பட்டு(?) மல்லிகா செரவத்தை அழைத்து ஆட வைத்திருக்கிறார் இப்பாடலில் ..இதுவும் குத்து பாடல் தான் ..பாடலின் இடையே ரா  ரா என  T .R தொண்டை வலிக்க பாடுவதை கேளுங்கள் .


 வடக்கே கேட்டு பாரு என்ன பத்தி சொல்லுவான் சர்தா பீடா போல என் பெற தான் மெல்லுவான் (பாலிவுட் நாயகியாம் )
 என தொடங்குகிறது ..

மல்லிகா நீ கடிச்சா நெல்லிக்கா போல் இனிப்பா ..பிடிச்சா வைச்சுகயா மனசுள்ள தைச்சுகையா  என போகிறது ..



நெடுவாலி..
ஒஸ்தி நாயகி ரிச்சா

நெடுவாலிக்கு அர்த்தம் தெரிந்தால் அன்பர்கள் சொல்க ..குத்து பாடல் ரகம் தான்

நெடு வாலி அடியே நெடு வாலி உடும்பா உடும்பா என்ன நீயும் கவ்வி போறியே -என தொடங்குகிறது  

டுமீலு தான் டுமீலு தான் மாமா கண்ணுல சுட்ட டுமீலு தான்  என பாடும் பெண் குரல் அருமை



ஒஸ்தி  

S .T.R ( அதாங்க சிம்பு)
இது அறிமுக பாடல் என்பதை தவிர வேறொன்றும் இல்லை  

தமிழ் நாட்டு காப்பு தான் தரணியெல்லாம் டாப்பு தான் ஒஸ்தி  என தொடங்குகிறது பாடல் ..

ரவுடிஊரில் உண்டு போலீஸ் ஊரில் உண்டு ரவுடி போலீஸ் உண்டா அது நான் தான் மாமே ஒஸ்தி என கலாய்க்கிறது நம்மை ..






உன்னாலே உன்னாலே .. 

 மெலோடி பாடல் இது ..அப்போ இப்போ என வார்த்தை உபயோகங்கள் பாடலில் அருமை 

"உன்னாலே உன்னாலேசுத்துதடி பூமிபந்து தன்னாலே  கண்ணாலே கண்ணாலே ஒட்டுதடி வானவில்லு என் மேல" என தொடங்குகிறது 


நாள் முழுக்க ஊர  நான் சுத்துனேன் அப்போ 
நீ சிரிச்ச உன்ன நான் சுத்துறேன் இப்போ

என பல  அப்போ இப்போக்கள் பாடலில் ..




  மொத்தத்தில் ஒஸ்தி உசத்தி தான் பாடலில் ..