Tuesday, February 21, 2012

கடவுளுக்கு வேலை வைக்கிறேன் நான் !

கடவுள் ,வேண்டுதல்

 லட்ச கணக்காணோர் எழுதிய
வங்கி தேர்வில் என்னை
தேர்வு செய்ய வேண்டினேன்
அவ்வாறே செய்தார் கடவுள்
கடவுளுக்கு வேலை வைக்கிறேன் நான்!



அலுவலகத்தில்
எனக்கெதிராய் செயல்படுபவர்களை
எனக்கு ஆதரவாய்
செயல்பட வேண்டுகிறேன்
அவ்வாறே செய்கிறார் கடவுள்
கடவுளுக்கு வேலை வைக்கிறேன் நான் !


அதிகாலையில் எழுந்திரிக்க
அலாரம் வைப்பதில்லை நான்
அவரிடம் சொல்கிறேன்
எழுப்புகிறார் குறிப்பிட்ட நேரம் முன்பே !
கடவுளுக்கு வேலை வைக்கிறேன் நான் !

இழுபறியில் இருக்கும் என
நினைத்த தேர்வு முடிவுகளில்
என்னை தேர்வு பெற செய்யுங்கள்
என வேண்டுகிறேன் அதையும்
செய்கிறார் எனது உழைப்பு கண்டு !
கடவுளுக்கு வேலை வைக்கிறேன் நான் !

இன்னும் எத்தனயோ
செய்தார் செய்கிறார் செய்வார்
ஆனால் நான் என்ன செய்தேன்
அவருக்கு !ஒன்றுமில்லை
கடவுளுக்கு  வேலை வைக்கிறேன் நான் !


(இக்கவிதை கர்த்தருக்கு நான் செலுத்தும் சாட்சி கவிதை .எனது வாழ்க்கை சம்பவங்கள்.சிறப்பான கருத்துக்கள் அளிக்க வேண்டுகிறேன் )


உங்கள் பார்வைக்கு :