Sunday, July 1, 2012

உங்கள் தளம் எனது தளத்தில் மாதம் முழுவதும் ..(BEST COMMENTS)

நமது தளத்தின் பதிவுகளுக்கு சிறப்பான கருத்துகள் கிடைத்தால் ஒரு மகிழ்ச்சி ஏற்படுவது உண்டு 
  • நிறைகளை மட்டும் அல்லாது குறைகளையும் சுட்டி காட்டி  அதிக பதிவுகளுக்கு வருகை தந்து கருத்தளித்த பதிவர் ஒருவருக்கு ஒவ்வொரு மாதமும் அவரின் தளத்தை  எனது தளத்தின் முகப்பில்   ஒரு மாதம் முழுவதும் இலவசமாக விளம்பர படுத்தலாம் என நினைக்கிறேன் .கடந்த மே  மாதம் சிறந்த கருத்தாளார் பெற்ற தளம்  வரலாற்று சுவடுகள் 

ஜூன் மாத சிறந்த கருத்தாளர் யார் ?
கடந்த ஜூன் மாதம் மொத்தம் 11 பதிவுகள் என்னால் வெளியிடப்பட்டது.அதில் சிறப்பான என்னை நெகிழ வைத்த  கருத்துக்கள் கீழே !

சிறந்த கருத்தாளர் பற்றிய இந்த பதிவுக்கு சிறந்த கருத்தாளர் அளித்த கருத்து கீழே   

வரலாற்று சுவடுகள் said...


சமூக வலைத்தளங்களில் நம் பதிவிற்கு கிடைக்கும் ஓட்டுகள் நம் பதிவின் தரத்தை தீர்மானிக்கும் காரணியாக எப்போதும் இருப்பதில்லை, ஆனால் நம் பதிவிற்க்கு கிடைக்கும் பின்னூட்டங்கள் நம் பதிவின் தரத்தை தீர்மானிக்கும் விசயத்தில் மிகமுக்கியமான காரணியாக இருக்கிறது என்றால் மிகையில்லை.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆண்களே இப்படி தானா ?
இந்த கவிதை பதிவுக்கு அன்பர் அளித்த வித்தியாசமான கருத்து கீழே



இக்பால் செல்வன் said...

ஆண்களே அப்படித் தான் .. அதற்கு அறிவியல் ரீதியாக காரணங்கள் உண்டு .... !!!அதற்கான அறிவியல் விளக்கம் வேண்டுமா ? பதிவாகத் தரவும் தயார் ...
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

என்ற கவிதைக்கு இருவேறு அன்பர்கள் அளித்த கருத்துக்கள் கீழே





ரேவா said...


எப்படி எங்கு என்று நினைக்கும் முன்னே பலருக்குள் காதல் முளைவிட்டிருக்கும், இந்த காதல் விருட்சத்தின் வேர்தேடி பயணத்திருக்கும் கவிதை நன்று...வாழ்த்துக்கள் சகோ


மயிலன் said...


கவிதைக்கு கருத்து சொல்ல எந்த யோக்கியதையும் எனக்கு இல்லை என்றாலும் உங்களிடம் இத்தனை நாள் உங்கள் கவிதைகள் பலவை வாசித்த இரசிகன் என்ற முறையில், நண்பன் என்ற முறையில் ஒன்று சொல்லுகிறேன்.. உங்கள் கருப்பொருளை அப்படியே வைத்துவிட்டு வார்த்தைகளுக்கு இன்னும் கொஞ்சம் மெனக்கெடுங்கள்... நிச்சயம் இன்னும் பல படி மேலே வரும்.. வாழ்த்துக்கள் பிரேம்.


PREM.S said...



@மயிலன் //அனைவருக்கும் புரியும் படி எழுத வேண்டும் என்று நினைக்கிறேன் அன்பரே !மரபு கவிதைகள் என்னால் எழுத இயலாது வெகு ஜன ரசிப்பும் அதற்கு அதிகம் இல்லை அதனால் தான்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

என்ற தந்தையர் தின கவிதைக்கு அன்பரின் கருத்து நெகிழ  வைத்தது உண்மையும் கூட





"என் ராஜபாட்டை"- ராஜா said... தந்தையின் அருமை அவர் இல்லாத பொழுது அல்லது நாம் தந்தையாக இருக்கும் போதுதான் பலருக்கு தெரிகின்றது ...


இப்போது ஏது கேட்டாலும் வாங்க வசதி இருந்தும் கேட்க அவர் இல்லை .. அவர் கேட்கும் போது வாங்க வசதி இல்லை ...I miss my father
++++++++++++++++++++++++++++++++++++++++++++

என்ற  பதிவிற்கு அன்பரின் உண்மையான கருத்து கீழே
ரெவெரி said... Good to listen...but I don't like to watch old songs.. +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மேற்கண்ட கருத்துகளை தவிர அன்பர்கள் பலர் கருத்து தெரிவித்திருந்தனர் .எனினும் என்னை நெகிழ வைத்த கருத்தை அளித்த "என் ராஜபாட்டை"- ராஜா  தளத்திற்கு அவருக்கு ஜூன் மாத சிறந்த கருத்தாளர் ஆக தேர்ந்து எடுத்து இருக்கிறேன் 
அவரது தளம் இந்த மாதம் முழுவதும் எனது தளத்தின் முகப்பில் விளம்பரபடுத்தப்படும் .தொடர்ந்து வருகை தாருங்கள் அன்பர்களே  நன்றி 

உங்கள் பார்வைக்கு : 
 
 சகுனி (saguni) -கலைஞருக்கு குத்தோ குத்து வசனங்கள்