Wednesday, July 11, 2012

நான் ஈ (NAAN EE) -எந்திரனை மிஞ்சியது எப்படி ?

மெல்லிய உணர்வுபூர்வமான காதல் வழிந்தோடும் படங்கள் நிச்சய வெற்றி பெறுவது உண்டு .

SHORT TERM MEMORY LOSS என்ற கருவை கொண்டிருந்தாலும் சூர்யா -அசின் இடையேயான காதல் காட்சிகளுக்காகவே கஜினியை பார்ப்பதுண்டு இன்னும் .

NAAN EE,NAAN E,SAMANTHA
அதே போல சில காட்சிகள் என்றாலும் நாணி (நாயகன் ) சமந்தா காதல் காட்சிகள் அவ்வளவு அழகு
வில்லன் சுதீப்புடன் பேசிக்  கொண்டே நானிக்கு நோட்டமிடும் போது மிளிர்கிறார் சமந்தா
"வீசும் வெளிச்சத்திலே
துகளாய் நான் வருவேன்"

"நுண் சிலை செய்திடும் பொன் சிலையே
பென்சிலை  சீவிடும்  பெண் சிலையே !"
என்ற கார்க்கியின் வரிகள் போதாதா அவர்கள் காதலை சொல்ல !

நாயகனை கொன்ற வில்லனை நாயகன் ஈயாக மறுபிறப்பு எடுத்து  வில்லனை பழிவாங்குவது தான்  கதை


எந்திரனை மிஞ்சும் கிராபிக்ஸ்

  • ஈயாக பிறப்பெடுப்பது, மத்த ஈக்களை கண்டு பறக்க நினைப்பது என ஒவ்வொன்றிலும் இயக்குனரின் உழைப்பு தெரிகிறது
  • ஈயின் கால்களில் இருந்து கதிர்வீச்சுகள் வந்து வில்லனை அளிப்பது போன்று லாஜிக் இல்லா  கிராபிக்ஸ் அமைக்காமல் ஈயால்  மனித இனம் படும் சின்ன  சின்ன விசயங்களை சற்று பெரிதாக்கி கிராபிக்ஸ் இல் காட்டி இருப்பது இயக்குனரின் சாமர்த்தியம் .
  • சமந்தா விடும் கண்ணீரில் ஈ நான் தான் ஈயாக மறு பிறப்பு எடுத்து இருக்கிறேன் நாணி என எழுதுவது கலக்கல்
  • ரஜினியின் எந்திரனை  மிஞ்சும் அளவுக்கு கிராபிக்ஸ் காட்சிகள் இருக்கின்றன .சில காட்சிகள் கிராபிக்ஸ் தானா  என யோசிக்க வைக்கிறது
ஈயின் நாயகன் சுதீப் 

SUDEEP,SUDHEEP

  • இந்த படத்தில் ஈக்கு அடுத்த படியாக உண்மையான நாயகன் என்றால் வில்லன் சுதீப் தான் .நாயகியை அடைய நானியை போட்டு தள்ளும் போதும் ஈயிடம் மாட்டி கொண்டு அல்லல் படும் போதும் கலக்குகிறார் .
  • ஈக்கு பயந்து ஹெல்மெட் மாட்டி கொண்டு மீட்டிங்கிற்கு வருவது வீட்டு பால்கனியில் நிர்வாணமாக ஈயை விரட்டுவது (ஓட்டுவது )என மனிதர் கலக்குகிறார்
சில காட்சிகளில் வந்தாலும் சந்தானம் கதையோடு ஒன்றுகிறார் .
இறுதியில் ஈ இறந்து மீண்டும் ஈயாக I AM BACK  என வருவது கலக்கல் .

குழந்தைகள் மட்டும் அல்லது அனைவரும் பார்க்க வேண்டிய  அருமையான படம் இந்த நான் ஈ 

 உங்கள் பார்வைக்கு :