Friday, September 2, 2011

வேலாயுதம் பாடல்கள் -ஓர் அலசல்



விஜய்க்கு எப்போதும் ஓர் ராசி உண்டு .படம் ப்ளாப் ஆனாலும் படப்பாடல்கள் ஹிட் ஆகி விடும்.அது போல வேலாயுதம் பட பாடல்களும் சிறப்பாகவே உள்ளது .
3 மெலடி 2 குத்து 1 தீம் சாங் என மொத்தம் 6 பாடல்கள் .பாடல்களும் எனக்கு பிடித்த சில வரிகளும் கீழே !



சொன்னா புரியாது ..
இது விஜய்யின் ஓபனிங் பாடலாக இருக்கும் என நினைக்கிறேன் .அரசியல் சாயம் பூசப்பட்ட பாடல் வரிகள்

"சொன்னா புரியாது சொல்லுக்குள்ள அடங்காது நீங்கெல்லாம் என் மேல வைச்ச பாசம் ஒன்னா பிறந்தாலும் இது போல இருக்காது நான் உங்க மேல வைச்ச நேசம் "

என தொடர்கிறது

>பாடல் கேட்க கிளிக்குங்கள்

வேலா !வேலா !

இது அவ்வப்போது விஜய் எதிரிகளை வதம் செய்யும் போது பின்னணியில் ஒலிக்கும் பாடலாக இருக்கும் என நினைக்கிறேன்

'வேலா வேலா வேலாயுதம் நீ ஒத்த பார்வை பாத்தா நூறாயுதம் ..


என தொடர்கிறது ..

பாடல் கேட்க

மொலச்சு மூணு...
இது மெல்லிசை பாடல் .காதலியை வர்ணிப்பதை கேளுங்கள் .

உன் விரலு வெண்டைக்காய் காலு அவரைக்காய் மூக்கு மிளகாய் மூக்குத்தி கடுகா என நீள்கிறது

உந்தன் நகம் கீறி என் உடலில் தழும்பேறி அலறும் நாள் தேடி என் ஆவல் பெருசாச்சு ...

என போகிறது பாடல் ..

பாடல் கேட்க கிளிக்குங்கள்

சில்லாக்ஸ்..

இது குத்து பாடல் .

சூரியனே தேவை இல்ல வித்திடலாமா ராத்திரியை மட்டும் வைச்சுகிடலாமா

என போகிறது பாடல் ..

தீம் தீம் தனனம் தீம் தீம் தனனம் என இடையில் வரும் வரிகளுக்கு பாடியவரின்
குரல் அருமை ..
பாடல் கேட்க

ரத்தத்தின் ரத்தமே !

இது அரசியல் பாடலா காதல் பாடலா குழப்பம் தான் ..

ரத்தத்தின் ரத்தமே என் இனிய உடன் பிறப்பே சொந்தத்தின் சொந்தமே நான் இயங்கும் உயிர் துடிப்பே ! என நீள்கிறது ..

செத்தாலும் புதைத்தாலும் செடியாக முளைத்தாலும் என் வாசம் உனக்காக தான் எனவும் சொல்கிறது ..

பாடல் கேட்க கிளிக்குங்கள்

மாயம் செய்தாயோ ..

இது மெல்லிசை காதல் பாடல் ..

நாண செடி வளர்த்த தோட்டம் ஆனேன் யானை புகுந்த சோலை ஆனேன் .என போகிறது ..

மீசைமுடி கரிய புற்கள் தாவி அதை கடிக்க ஏங்கும் பற்கள் .. என நீள்கிறது ..

பாடல் கேட்க கிளிக்குங்கள்