தனிமை
சிலருக்கு இது கசக்கும்
சிலருக்கு இது பிடிக்கும்
கவிஞனின் கவிதைகளுக்கு
ஏற்ற இடம் இது
தீயவை நடக்க சிலருக்கு
வாய்ப்பாகும் இது
தனிமையில் நமக்கு
என்ன எண்ணம் தோன்றுகிறதோ
அதுவே நம் வாழ்க்கையை
தீர்மானிக்கிறது
தனிமை கொடுமை பலருக்கு
ஆனாலும் தனிமை இனிமை எனக்கு
கவிகள் கிடைப்பதால் ...