ஆண் என்ற அகங்காரம்
சிறிதாவது இருக்கும்
ஆண்கள் அனைவருக்கும்
அடி மனதில் ...
என்ன நாம் அப்படி உயர்ந்து
விட்டோம்? திண் தோள்களும்
உடல் வலிமையையும் தவிர ..
நமக்குள் ஓர் உயிரை
சுமக்க முடியுமா
தாய் என்ற தவச் சொல்
நமக்கு கிடைக்குமா ?
நமக்கு ஒரே பெருமை
பெண்ணுக்கு தாய்மையை
தருவது மட்டும் தான்
அதுவும் நாளைய உலகில்
இல்லாமல்போகலாம்
அப்போது நமக்கு என்ன பெருமை?