"பிரதமர் வாஜ்பய்க்கும், அருமை நண்பர் எம்.ஜி.ஆருக்கும், ஜானகி
அம்மையாருக்கும் செய்த துரோகத்தையும், வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும்
விடுதுலைப் புலிகளுக்கும் செய்த துரோகத்தையும், சுயநல அரசியலின்
காரணமாகத் தற்போது தமிழக மக்களுக்கே தொடர்ந்து செய்து வரும்
துரோகத்தையும் மறைப்பதற்காக: மற்றவர்களைப் பார்த்து, "துரோகம்,
துரோகம்" என்று கூக்குரலிடும் உத்தியை, இங்குள்ள தமிழர்களும், ஈழத்
தமிழர்களும் ஏற்க மாட்டார்கள்; உலகத் தமிழர்களும் ஒருபோதும் ஒப்புக்
கொள்ளமாட்டார்கள் !"
மேற்கண்ட status யை கலைஞர் போட்டது தான் தாமதம்.துள்ளி எழுந்த facebook பயனர்கள் அளித்த கருத்துக்கள் கலைஞர் ஏன் இதனை போட்டோம் என நினைக்கும் அளவுக்கு இருக்கிறது.ஒரு சில கருத்துக்கள் படு கேவலமாக இருக்கிறது .கொச்சை வார்தைகளிளிலும் ஒருமையில் விழித்தும் பல ..இதையெல்லாம் படித்து கொண்டு கலைஞர் இருக்க வேண்டுமா facebook இல் என்பது தான் என் எண்ணம்
கலைஞர் இதை எல்லாம் டைப் செய்து எழுதுகிறாரா என தெரிய வில்லை ஆனால் அதிலும் நம் அரசியல் பதிவர் ஒருவர் குற்றம் கண்டு கலைஞரின் தமிழுக்கே ஆப்பு வைத்திருக்கிறார் .அது வேறு யாரும் அல்ல அன்பர் ரகீம் கஸாலி தான்
அவரின் கருத்தும் நாகரிகமான சில கருத்துக்களும் கீழே
ரஹீம் கஸாலி விடுதலைப்புலியா? விடுதுலைப்புலியா?
ச. சரவணன் கரட்டு கரட்டு நீ மிரட்டு மிரட்டு
Thiru Thambi ஐயா நல்லா பாருங்க,
அது உங்க உருவம்தான் கண்ணாடிய பாத்து பேசிட்டிருக்கீங்க ;
Muthu Gopalakrishnan வாக்குமூலம் போல இருக்கு
Karthi Keyan இன்றைக்கும் துரோகம் என்றால் தமிழர்கள் மத்தியில்
யாருடைய பெயர் ஞாபகம் வருகிறது என்று ஒரு கருத்து கணிப்பு நடத்தி
பார்த்துவிடலாமே...
Blackstartamilan Eevera இதே அம்மையார் அவர்கள் போர் என்றால் உயிரிழப்பு
சாதாரணம் என்றவர் தானே
Nambikai Raj நீர் எம்.ஜி.ஆருக்கும் வைகோவுக்கும் செய்தது என்ன
பெரியவரே? தியாகமா? துரோகமா?
க. தமிழன் உங்களையே நீங்கள் திட்டிக்கிறிங்க நினைச்சி அப்படியே ஷாக்
ஆயிட்டேன்.. ஜெயலலிதா என்ற இடத்தில் கருணாநிதி என்றும் சேர்த்து
எழுதுங்க.
Jeyaraajz Defending Champion thalaivare enna vajbai patti solreenge.........?! adutha
kuttanikku thundu podureengalooooooooooo?!!!!!!!1
Senthil Pandi vajbai inga enga vandharu? oh adutha kootaniku adi poda arambichacha?
உங்கள் பார்வைக்கு :