Tuesday, December 6, 2016

அம்மா -ஓர் கவிதாஞ்சலி !..




என் ஆத்ம தலைவன் 
நீர் இல்லை 
என் விருப்பமும்
நீர் இல்லை ஆனாலும்
கண்ணோரம் வழிகிறது
இருதுளி கண்ணீர்!

தைரியத்தின் மறுபெயர்
தமிழகத்தின் திருஉயிர்
சமரசம் செய்து கொள்ளா
தலைவி நீ !


அரசியல் வெற்றிடம் இங்கே
அதை நிரப்புவார் எங்கே ?
எதிர்த்தோர் மனதிலும் 
ஓர் இடம் அனைவர் 
நெஞ்சிலும் நீங்கா இடம்!

என் ஆத்ம தலைவன் 
நீர் இல்லை 
என் விருப்பமும்
நீர் இல்லை ஆனாலும்
கண்ணோரம் வழிகிறது
இருதுளி கண்ணீர்!

-முதல்வரின் மறைவிற்கு எனது கவிதாஞ்சலி