Sunday, September 18, 2011

உலகச் சாம்பியனா நாம் ?

டெஸ்ட் தொடரை இழப்பதற்கு முன்பு ஒருமுதல் இடம் இழந்த இந்தியா என்ற  பதிவு போட்டிருந்தேன் .டெஸ்ட் தொடரை 0-4  என்ற   கணக்கில்  இழந்த நாம் இப்போது ஒரு தின தொடரையும்  0-3 என்ற கணக்கில் இழந்திருக்கிறோம் .இது பற்றிய எனது உணர்வு ..



 காயம் அடைந்ததாய் 
சொல்லிக்கொண்டவர்கள் 
காயம் அடைந்தவர்கள் 
எல்லோரும்  பங்கேற்பர்
வர விருக்கும் 
CHAMPIONS LEAGUE தொடரில் ..
என்ன மாயமோ இது ?
எல்லாம் பணம் தானா ?

 0-4  என்ற  கணக்கில்  
டெஸ்ட் தொடரை இழந்தோம் 
௦-3 என்ற  கணக்கில்
ஒரு தின தொடரை இழந்திருக்கிறோம்
இப்போது..
இனி இழப்பதற்கு  ஏது  ?

உலக சாம்பியன் என்று 
மார்தட்டி அதிக நாட்கள் இல்லை ..
அதற்குள் ஒரு வெற்றி கூட 
இல்லாமல் தாயகம் 
திரும்பி இருக்கிறது இந்தியா 

அதிர்ஷ்டமும் இல்லை நமக்கு 
வெற்றியும் இல்லை 
இந்த ஒரு தின தொடரில் ..
மழை கூட  நமக்கு 
சாதகமாய் இல்லை.


டிராவிட்டும் ஒய்வு பெற்று 
விட்டார் இனி யாரை நம்பி 
வெளிநாட்டு சுற்று பயணங்கள்?
மேற்கிந்திய தீவுகள் தொடர் 
முடிந்தவுடன் நாம் வங்க தேசத்திற்கு 
சென்றிருக்க வேண்டும் 
என்று சொன்னாலும் சொல்வார் தோனி ..

 
டெஸ்ட் தொடரை விட 
ஒரு தின தொடரில் நமது 
பேட்டிங் சிறந்து இருப்பது 
மட்டுமே ஆறுதல் ..

டெஸ்ட் ,இருபது ஓவர் 
ஒருதின போட்டி என
முத்தாய்ப்பு தோல்விகள் 
உலகச் சாம்பியனுக்கு ...
நாம் சாம்பியனா என்ன ?..






Monday, September 5, 2011

இரு காதலிகளும்... நானும் ...



அவள் வந்ததில் இருந்து
என்னை நீ சரியாக
கவனிப்பதே இல்லை
புலம்புகிறாள் முதல் காதலி ..





இணையத்தில் எப்போதும்
இணைந்திருப்பாய் என்னுடன் ..
இப்போது அவளுடன்
இணைந்திருக்கிறாய்..
 மறந்து விட்டாயா என்னை ..

 உன் கைகள் என்னை
 எப்போதும் வருடி கொண்டே
 இருக்கும் முன்பு ..இப்போது
 அப்படி இல்லை ..

நான் அளவில் சிறியவள்
என்பதால் வெறுக்கிறாயா
 இல்லை   அவள் மோகம்
உன்னை ஆட்டுவிக்கிறதா ..

 எப்படி ஆனாலும் உன்
முதல்   காதலி நான் தான்
 மறந்து  விடாதே !

அவள் அழகி
தான் உன்னை   எப்போதும்
இணையத்தில் இயங்க வைப்பவள் தான்
அதற்காக என்னை மறந்து
விடாதே காதலா !
நான்  உன்னவள்  ...



  கடந்த வாரம் சோனி வயோ லேப்டாப் ஓன்று வாங்கினேன் .அதன் பிறகு செல்போனை அவ்வளவாய் பயன்படுத்துவதில்லை ..இக்கவிதை செல்போன் தன்னை முன்பு போல பயன்படுத்தாதர்க்கு என்னிடம் புலம்புவதாக எனது கற்பனையில் ..















Friday, September 2, 2011

வேலாயுதம் பாடல்கள் -ஓர் அலசல்



விஜய்க்கு எப்போதும் ஓர் ராசி உண்டு .படம் ப்ளாப் ஆனாலும் படப்பாடல்கள் ஹிட் ஆகி விடும்.அது போல வேலாயுதம் பட பாடல்களும் சிறப்பாகவே உள்ளது .
3 மெலடி 2 குத்து 1 தீம் சாங் என மொத்தம் 6 பாடல்கள் .பாடல்களும் எனக்கு பிடித்த சில வரிகளும் கீழே !



சொன்னா புரியாது ..
இது விஜய்யின் ஓபனிங் பாடலாக இருக்கும் என நினைக்கிறேன் .அரசியல் சாயம் பூசப்பட்ட பாடல் வரிகள்

"சொன்னா புரியாது சொல்லுக்குள்ள அடங்காது நீங்கெல்லாம் என் மேல வைச்ச பாசம் ஒன்னா பிறந்தாலும் இது போல இருக்காது நான் உங்க மேல வைச்ச நேசம் "

என தொடர்கிறது

>பாடல் கேட்க கிளிக்குங்கள்

வேலா !வேலா !

இது அவ்வப்போது விஜய் எதிரிகளை வதம் செய்யும் போது பின்னணியில் ஒலிக்கும் பாடலாக இருக்கும் என நினைக்கிறேன்

'வேலா வேலா வேலாயுதம் நீ ஒத்த பார்வை பாத்தா நூறாயுதம் ..


என தொடர்கிறது ..

பாடல் கேட்க

மொலச்சு மூணு...
இது மெல்லிசை பாடல் .காதலியை வர்ணிப்பதை கேளுங்கள் .

உன் விரலு வெண்டைக்காய் காலு அவரைக்காய் மூக்கு மிளகாய் மூக்குத்தி கடுகா என நீள்கிறது

உந்தன் நகம் கீறி என் உடலில் தழும்பேறி அலறும் நாள் தேடி என் ஆவல் பெருசாச்சு ...

என போகிறது பாடல் ..

பாடல் கேட்க கிளிக்குங்கள்

சில்லாக்ஸ்..

இது குத்து பாடல் .

சூரியனே தேவை இல்ல வித்திடலாமா ராத்திரியை மட்டும் வைச்சுகிடலாமா

என போகிறது பாடல் ..

தீம் தீம் தனனம் தீம் தீம் தனனம் என இடையில் வரும் வரிகளுக்கு பாடியவரின்
குரல் அருமை ..
பாடல் கேட்க

ரத்தத்தின் ரத்தமே !

இது அரசியல் பாடலா காதல் பாடலா குழப்பம் தான் ..

ரத்தத்தின் ரத்தமே என் இனிய உடன் பிறப்பே சொந்தத்தின் சொந்தமே நான் இயங்கும் உயிர் துடிப்பே ! என நீள்கிறது ..

செத்தாலும் புதைத்தாலும் செடியாக முளைத்தாலும் என் வாசம் உனக்காக தான் எனவும் சொல்கிறது ..

பாடல் கேட்க கிளிக்குங்கள்

மாயம் செய்தாயோ ..

இது மெல்லிசை காதல் பாடல் ..

நாண செடி வளர்த்த தோட்டம் ஆனேன் யானை புகுந்த சோலை ஆனேன் .என போகிறது ..

மீசைமுடி கரிய புற்கள் தாவி அதை கடிக்க ஏங்கும் பற்கள் .. என நீள்கிறது ..

பாடல் கேட்க கிளிக்குங்கள்