Thursday, December 30, 2010

புது வருட சபதம் 2011


ஒவ்வொரு புது வருடம்
பிறக்கும் போதும்
ஆவேசமாய் பல சபதம்
ஏற்பர் பெரும்பாலானோர் ...
நடந்தது என்ன ?

சபதங்களுள்
ஒன்றையாவது நம்மால்
செய்ய முடிகிறதா ?முடிந்தால் சரி

இல்லையெனில்
இந்த புது வருடத்திலும்
அதே சபதத்தை
சற்று மாற்றத்தோடு
மீண்டும் நினைக்க போகிறோம்

சபதங்கள் வீணல்ல
அதை அடைய நாம்
முயலாததே அதை
வீணாக்குகிறது

Monday, December 27, 2010

கை விடாதீர்


எமக்காய் எவ்வளவோ

செய்தீர் செய்கிறிரீர் செய்வீர்

உமக்காய் நான் என்ன

செய்தேன்? ஒன்றுமில்லை


உன் ஆலயம் வர

என்னால் முடியாமல்

போனது ஏன் ?

சோம்பலா? நேரம் இல்லாமையா?

அறியாமையா? எக்காரணம்

கொண்டும் என்னை நியாய படுத்த

முடியாது -நீர் என்னை தவிர்க்கவா

செய்தீர் நான் உம்மை தரிசிக்க

வராததற்கு..


இனியாவது உம்மை பின் தொடர

முயல்கிறேன் முடியா விட்டால்
என்னை கைவிடாதீர் நான் உம் பிள்ளை!

Sunday, December 19, 2010

தனிமை


















தனிமை
சிலருக்கு இது கசக்கும்
சிலருக்கு இது பிடிக்கும்

கவிஞனின் கவிதைகளுக்கு
ஏற்ற இடம் இது
தீயவை நடக்க சிலருக்கு
வாய்ப்பாகும் இது

தனிமையில் நமக்கு
என்ன எண்ணம் தோன்றுகிறதோ
அதுவே நம் வாழ்க்கையை
தீர்மானிக்கிறது

தனிமை கொடுமை பலருக்கு
ஆனாலும் தனிமை இனிமை எனக்கு
கவிகள் கிடைப்பதால் ...

அது மட்டும் இல்லை எனில் ?























 ஆண் என்ற அகங்காரம்
சிறிதாவது இருக்கும்
ஆண்கள் அனைவருக்கும்
அடி மனதில் ...

என்ன நாம் அப்படி உயர்ந்து
விட்டோம்? திண் தோள்களும்
உடல் வலிமையையும் தவிர ..

நமக்குள் ஓர் உயிரை
சுமக்க முடியுமா
தாய் என்ற தவச் சொல்
நமக்கு கிடைக்குமா ?

நமக்கு ஒரே பெருமை
பெண்ணுக்கு தாய்மையை
தருவது மட்டும் தான்
அதுவும் நாளைய உலகில்
இல்லாமல்போகலாம்
அப்போது நமக்கு என்ன பெருமை?

Thursday, December 9, 2010

காவலன் பாடல்கள்
















 மொத்தம் ஐந்து பாடல்கள்
மெல்லிசை பாடல்கள் இரண்டு
அறிமுக குத்து பாடல் ஓன்று
ராப் பாடல் ஓன்று
இன்னொரு குத்து பாடல் என
விஜய் பட பாடல்கள் அமைப்பு
இதிலும் காணப்படுகிறது

ஆச்சர்ய அதிசயமாக
நாயகியை தேடி காதல் செய்யும்
பாடல்கள் இரண்டு உண்டு இதில்
முந்தைய படங்களில்
நாயகி தான் விஜயை
காதல் செய்வது போல் இருக்கும்

"விண்ணை காப்பான் ஒருவன்" பாடல்
விஜயின் அறிமுக பாடல்
"யாரது" பாடல் கார்த்திக்கின்
குரலில் காதலியை தேடும் பாடல்
மெலிதாய் இனிக்கிறது

பட்டாம்பூச்சி பாடலில் கே.கே மற்றும்
ரீட்டா குரலில் மயக்குகிறது
"சட சட" என்ற பாடலில்
பட பட என பாடியிருக்கிறார்
கார்த்திக்

"ஸ்டெப் ஸ்டெப் "பாடல் ராப்
ரகம் குதிக்க வைக்கும் பாடல்
மொத்தத்தில் விஜய் படத்திற்கே
உண்டான பாடல்கள்
இந்த முறை மெலோடியயும்
இணைத்திருக்கிறார் இசை வித்தியாசாகர் என்பதால் ...
(பாடல்கள் கேக்க)
click here

Monday, November 29, 2010

உயிர்கொல்லி தினம்

*HAPPY LOVERS DAY
HAPPY WOMENS DAY
என்பது போல்
HAPPY AIDS DAY என்று
சொல்ல முடியுமா?
முடியாதல்லவா!

*காலனை அறிந்தே
கட்டி தழுவ
நினைத்தவர்களின் தினம்
இது !

*மாற்றான் தோட்டத்து
மல்லிகைக்கு
தான் மணம் உண்டு
மங்கையர்க்கு அல்ல !

*மருந்தரியா நோய்க்கு
பாதுகாப்பில்லா
உறவு ஏன் ?
உயிர் குடிக்கும்
என தெரிந்தும்
உல்லாசம் ஏன் ?

*நாகரிகத்தின் வெளிப்பாடு
நல்லதற்கு தான்
தீயதர்க்கு அல்ல !
AIDS இல்லா இந்தியா உருவாக
மனைவியை மட்டுமே
மனதில் கொள்வோம்!

Wednesday, November 24, 2010

என் தந்தை


**கருத்துகள் அதிகம்
பகிர்ந்ததில்லை...
அளவளாவி அதிகம்
பேசியதில்லை ...

**அதிகமாய் என்னை
கண்டித்ததில்லை ...
கஷ்ட காலத்தில் கூட
படிப்பே பிரதானம் என
வேலைக்கு அனுப்பியதில்லை ...

**சிறு கடின வேலையில்
கூட என்னை
ஈடுபடுத்தியது இல்லை..
என் தந்தை...

**வேறுபட்ட தந்தை களுள்
என் தந்தையும் ஒருவர் ...

Monday, November 22, 2010

தந்தை


எப்போதும் என்னிடம்
கண்டிப்பாய் கறாராய்
இறுக்கமாய் இருக்கும்
தந்தை இனிதாய் பேசினார்
அரசு வேலை கிடைத்த சமயம்..
இப்போது நினைக்கிறேன்
அவர் அப்படி நடந்து கொண்டதே
நான் நன்றாக வர வேண்டும்
என்பதால் தானோ என்று...

Saturday, October 23, 2010

பெண்




**பெண் ஓர் தென்றல்
அவளை மதிப்பவர்க்கு!
பெண் ஓர் புயல்
அவளை பழிப்பவர்க்கு!

**பெண் ஓர் சூரியன்
பகைவரை சுட்டெரிப்பதில்!
பெண் ஓர் நிலா
கவிஞர்களை
சுண்டி இழுப்பதில்!

**பெண் ஓர் கவிதை
காதலனுக்கு
பெண் ஓர் விதை
குடும்பத்தை விஸ்தரிப்பதில்
பெண் ஓர் மலர்
மென்மையின் உருவாய் இருப்பதால்..

**மொத்தத்தில்
பெண் ஓர் இறை
படைக்கிறாள்
காக்கிறாள் அழிப்பதில்லை...

கலவை பெண்


பூக்களை
கொஞ்சம் கிள்ளி எடுத்து
புன்னகை
கொஞ்சம் செய்து கலந்து
உறவுகளை
கொஞ்சம் உயிரில் சுமந்து
செய்த உன்னத கலவை
பெண்

Friday, October 22, 2010

நாளைய தமிழ்


*அங்கு கண்டேன்
இங்கு கண்டேன்
கூறிடுவர் விரைவில்
நம் தமிழ் எங்கு கண்டோம் என !

*ஆங்கிலம் இணைப்பு மொழி தானே
ஏன் உயிர்ப்பாக நினைக்கிறாய் ?
ஆங்கிலத்தை அரவணை
தவறில்லை தமிழை ஏன்
துறவறம் கொள்ள செய்கிறாய் ?

*தமிழனை கண்டாலாவது
தமிழில் பேசு
பிறரோடு உன் ஆங்கிலத்தை வீசு!

*நாளைய உலகில்
தமிழ் இருக்கட்டும்
இறக்கச் செய்திடாதே !

பெண்


கண்கள் அவளின் கவிமொழி
நாணம் அவளின் அடையாளம்
நளினம் அவளின் நற்குணம்
ஒழுக்கம் அவளின் உயிர்
அவள் தான் பெண் !

Wednesday, September 15, 2010

Wednesday, September 8, 2010

Friday, September 3, 2010

Wednesday, September 1, 2010

Tuesday, August 31, 2010

ஜாதி


காதலுக்கு அது எதிரி
மோதலுக்கு அது உதவி
நட்புக்கு பொருட்டல்ல
பிறப்பிலும் தெரிவதில்லை
உதிரத்தில் இல்லாதது
உணர்வுகளில் கலந்தது என்று ?

Saturday, August 14, 2010