ஒவ்வொரு புது வருடம்
பிறக்கும் போதும்
ஆவேசமாய் பல சபதம்
ஏற்பர் பெரும்பாலானோர் ...
நடந்தது என்ன ?
சபதங்களுள்
ஒன்றையாவது நம்மால்
செய்ய முடிகிறதா ?முடிந்தால் சரி
இல்லையெனில்
இந்த புது வருடத்திலும்
அதே சபதத்தை
சற்று மாற்றத்தோடு
மீண்டும் நினைக்க போகிறோம்
சபதங்கள் வீணல்ல
அதை அடைய நாம்
முயலாததே அதை
வீணாக்குகிறது