(கடந்த டிசம்பர் 2010 பாரத ஸ்டேட் வங்கி (STATE BANK OF INDIA) திருச்சி கைலாசபுரம் கிளையில் பணியில் நான் சேர்ந்த போது பயிற்சி மையத்தில் நான் வாசித்த கவிதை இது.. பாரத ஸ்டேட் வங்கி பற்றிய உங்கள் கருத்துக்களும் வரவேற்க்கபடுகின்றன .. )
கிளை இல்லா
மரம் உண்டு
பாரத ஸ்டேட் வங்கி
கிளை இல்லா ஊர் உண்டா?
கடல் நடுவே காசில்லாமல்
கலங்கி நின்றாலும்
காப்பாற்றும் பாரத ஸ்டேட் வங்கி
ATM மூலம் ...
கல்வி நிலையம்
இல்லா ஊரிலும்
பாரத ஸ்டேட் வங்கி
ATM உண்டு ..
வாடிக்கையாளர்
திருப்தியே முதன்மையாய்
கொண்டதால் தான்
முதலிடம் பெற்றதா
இவ்வங்கி ?
இந்தியாவில் மட்டுமல்ல
உலகிலும் முதலிடம்
விரைவில் கிடைக்கும்
என்ற நம்பிக்கையில்
உங்கள் வாடிக்கையாளன்
இப்போது உங்கள் ஊழியனாய் ...