Wednesday, July 27, 2011

தெய்வ திருமகள் -எனது பார்வையில் ..








கதை
5 வயது மனநிலை உடைய மனநிலை பிறழ்ந்த விக்ரம் தான் 5 வயது மகளை தனது மாமனாரால் பிரிய நேரிடுகிறது ..பிரிந்த அப்பா மகள் ஓன்று சேர்ந்தார்களா என்பதை உணர்ச்சியாய் நெகிழ்ச்சியாய்சொல்லும் படம் தான் தெய்வ திருமகள் ..

சுவாரசியங்கள்












தெய்வ திருமகன் என்ற படத்தின் தலைப்பு தெய்வ திருமகள் என்று ஆனது கூட பொருத்தம் தான்.விக்ரமின் மகள் தான் தெய்வ திருமகள் படத்தில் ..


  • கிருஸ்ணா என்ற மனநிலை பாதிக்க பட்டவராக வாழ்ந்திருக்கிறார் விக்ரம் மகளின் பிரிவை தாங்க முடியாத நேரங்களிலும் மகளை கொஞ்சும் நேரங்களிலும் அருமை

  • விக்ரமின் மகள் நிலவாக சாரா .குட்டி நடிப்பில் சுட்டி .முக பாவனைகள் அருமை .ஒரே ஒரு ஊர்ல ஒரே ஒரு ராஜாவாம் பாடலில் நிலா கேட்கும் கேள்விகளுக்கு விக்ரம் சமாளிப்பது அருமை .குழந்தைகளுக்கு பிடிக்க கூடிய பாடல் ..

  • அனுஷ்கா வை வழக்கறிஞர் ஆக்கிய துணிச்சல் இயக்குனருக்கு வெல்லவும் செய்திருக்கிறார் ..
  • சந்தானம் அனுஷ்காவிர்க்கு வழக்கு தேடி கொடுக்கும் பணியை செய்கிறார் .கொஞ்சமாய் சிரிக்கவும் வைக்கிறார்

  • விக்ரம் மகளுக்கு சித்தியாக அமலா பால் ஸ்வேதா ஆக மிளிர்ந்தாலும் அனுஷ்கா விற்கு தான் நடிப்பு

  • அனுஷ்காவிடம் போட்டியிடும் வக்கீல் ஆக நாசர் .நாசரின் மகன் காய்ச்சலால் அவதியுற விக்ரம் நாசரிடமிருந்து தப்பி போய் மருந்து வாங்கி கொடுக்கும் காட்சியில் விக்ரம் மனநிலை பாதிக்க பட்டவரா என வியப்பு நடிப்பு அருமை


  • M.S.பாஸ்கர் விக்ரமை தனது மனைவியுடன் சந்தேக படும் காட்சிகள் எரிச்சல் ஊட்டுகிறது ..

  • நீதி மன்ற காட்சிகள் அருமை

  • விக்ரம் தனது இறந்த மனைவி உடன் ப்ளாஷ் பேக் வைக்காதது ஆறுதல்

  • இறுதி காட்சியில் நம் கண்கள் குளமாவது இயக்குனரின் வெற்றி .

  • இது எனது முதல் திரை விமர்சனம் .இது படத்தை பற்றிய எனது பார்வை மட்டுமே !