Saturday, September 2, 2017

மரிக்கவா பிறந்தாய் ?

NEET,SUICIDE,ANITHA,ENTRANCE,அனிதா ,நீட் ,தற்கொலை ,அனிதா தற்கொலை



நீட்டி முழக்கி
ஒரு  வருட அவசர சட்டம்
என தம் வேலையை
திறம்பட செய்த அரசியல் கழிசடைகள்
நீட் உண்டா இல்லையா
என குழம்பிய மாணவர்கள்



மருத்துவ படிப்பில் சேர
நீட் வேண்டும் -அதற்கு ஏன்
இத்தனை குளறுபடிகள்
நீர் உண்டென்றால்
எம் மாணாக்கர் அதிலும்
வெல்வர் உண்டு இல்லை என
இரட்டை வேடம் ஏன் ?

தமிழகத்துக்கு விதிவிலக்கு
என பொய்யுரைத்து அதை
சட்டமேற்றி என எத்தனை
நாடகங்கள் !-உங்களுக்கு
விளையாட வேறு எதுவும்
விடுதிகள் கிடைக்க வில்லையா
இப்போது !-மாணவர் தம் தற்கொலை


ஏழைகளுக்கு எட்டா கனியா
இம்மருத்துவம் -எத்தனை கனவுகளுடன்
இந்த அனிதா இறுதியில்
தற்கொலை செய்தாளே!

உன் மீதும்
ஓர் கோபம் உண்டு சகோதரி
தற்கொலை எதற்கும் தீர்வாகாது
என்பது நீ அறிய வில்லையா?
உன் மன உளைச்சல் அறிவோம்
ஆனாலும் !...

உன்னை மறுத்தவர் எல்லாம் வியக்கும் வண்ணம்
நீ  மருத்துவர் ஆகி  இருக்க  வேண்டாமா ?
இப்படி மரித்தா போவாய் ?