Tuesday, May 17, 2011

கலைஞருக்கு ...



முதுமைக்கு ஓய்வு தந்த
இளைஞா !
கலைஞா! உமக்கு ஓய்வு
தர இம்மக்கள்
நினைத்தது
ஏன் ?

உடன்பிறப்புகள்
உயிர் எடுத்த கதை அறிந்தாயா
முதல்வா !
முதல்வா என முழங்க
முடியாதோ இனி ..

மின்சார வெட்டும்
அலைகற்றை ஊழலும்
தான் உன்னை வீழ்த்தியதை
அறிந்தாயா ? எத்தனை
சாணக்கியன் நீங்கள்
இதனை தீர்க்க இயலாமல்
போனது ஏன் ?


இலவசங்கள்
வாங்கி கொண்டு உம்மை
இல்லாமல் செய்து விட்டனரே
இம்மக்கள்



108 திட்டம் மூலம் பல
உயிர் காத்து மகிழ
செய்தாயே !
மறந்தனரே மக்கள்


கலைஞர் காப்பீடு
திட்டம் மூலம் உயர் சிகிச்சையை
இலவசமாய் தந்து
இன்னுயிர் தந்தீரே பலருக்கு ..
மறந்தனரே! இம்மக்கள் ..


மாற்றம் வேண்டுமென்று
வாக்களித்த மக்கள்
மாற்றம் காண்பர் இன்னும் சில
வருடங்களில் .....
உம்மை ஏன் அகற்றினோம் என்று ...

Monday, April 4, 2011

தமிழா! தமிழா!


தமிழா
உன்னை
ஆடு மாடு கொடுத்து
மேய்க்க சொல்கிறது
ஒரு கூட்டம்

மிக்சி ,கிரைண்டர்
கொடுத்து உன்னை
ஆட்டுவிக்க நினைக்கிறது
ஒரு கூட்டம்

இலவசங்கள்
வாங்கி கொண்டு
உன்னை விற்க போகிறாயா
ஐந்து ஆண்டுகள்
உன்னை ஆள்வதற்கு
உன்னை விற்க போகிறாயா
வாக்கிற்கு பணம் வாங்கி ...

கள்ளபணம் தானே
வாங்கி கொள் என
ஒரு கூட்டம் உன்னை சொல்லும்
உண்மை தான்
ஆனால் அதை வாங்க
நமக்கு என்ன உரிமை ?

உன் குடியுரிமையை
காப்பாற்ற வாக்களி
நீ இந்தியன் என்றால் வாக்களி
பணம் வாங்காமல் ..

Saturday, March 19, 2011

தமிழ் எழுத்துக்களை/வலை தளங்களை செல்போனில் படிக்க !


**தமிழ் வலை தளங்கள் /தமிழ் எழுத்துகள்
நோக்கியா வின் touch screen mobile
மற்றும் nokia வின்
வேறு சில மாடல்களில்
படிக்க முடிவதில்லை
.கட்டம் கட்டமாக எழுத்துக்கள் தோன்றும்
இதை தீர்பதற்கான வழி இது


**முதலில் இங்கு சென்று
உங்கள் மொபைலுக்கு ஏற்ற operamini browser ஐ download
செய்து கொள்ளுங்கள் (not operamobile browser)


**பின்னர் operamini browserai open
செய்து அதில் address bar இல் (not search bar) about:config என டைப் செயுங்கள்

**இப்போது power user settings தோன்றும் அதில் use bitmap fonts for complex scripts என்று இறுதியில் உள்ளது அதில் no என இருக்கும் அதை yes என மாற்றுங்கள் save செய்யுங்கள்
**அவ்வளவு தான் இனி உங்கள் போனில் தமிழ் வலைத்தளங்களை தமிழ் எழுத்துக்களை படிக்க முடியும்

Friday, February 18, 2011

கோப்பை நமதே !


பெட்டிக்கடை முதல்
நட்சத்திர ஹோட்டல்கள்
வரை எங்கும் எதிலும்
பேச பட இருக்கிறது
உலக கோப்பை கிரிக்கெட்
நாளை முதல் ..


14 அணிகள் மல்லுகட்டும்
போதிலும் கோப்பை வெல்ல
நமக்கு வாய்ப்பு அதிகமோ !
அனுபவ படை இளம் படை என
சரி விகித வீரர்களை கொண்டதால் ...


பயிற்சி ஆட்டங்களில்
சிங்கங்களை
துரத்தி வெற்றி கண்டோம்
பயமிருக்கிறது வங்கதேசத்திடம்
அலட்சியமாக விளையாடி
தோற்று விடுவோமா என்று ..

வெல்வோம் சச்சினுக்கு
கோப்பையை பரிசாய்
கொடுப்போம் கனா காண்போம்
நனவாக்குவது வீரர்கள் கையில் ..
கோப்பை நமதே !




Thursday, February 3, 2011

உன்னை தொலைத்த நாள் முதல் ...


தனிமை எனக்கு
பிடித்த ஒன்று தான்
ஆனால் நீ இல்லாத தனிமை
கொடுமை அல்லவா!


நீ இருந்து விடுவாய்
நான் இல்லாமல் ...
என்னால் இருக்க
முடிய வில்லையே
ஒருகணம் கூட
நீ இல்லாமல் ...

என் உறுப்புகள்
செயல் இழந்ததாய்
உணர்கிறேன்
உன்னை தொலைத்த
நாள் முதல் ..

இப்போது வேறொரு
கள்வனின்
கரங்களில் நீ ..
உன்னை எப்படி வைத்து
கொள்வானோ என்ற
ஆதங்கத்தில் நான் ...

தினம் தினம்
உன்னை பார்க்காமல்
புழுங்கி கொண்டிருக்கிறது
என் மனம்...

உன்னை தொற்றுகிருமிகள்
தாக்கி விட்டால்
பதறி போவேன் நான்
உடனே விடுவிப்பது தான்
என் முதல் வேலை !

எங்கு தொலைந்து
போனாய் என்னை விட்டு ?
எப்படி இருக்கிறாய்
என் இனிய கைபேசியே ?
என் கரம் படாமல் ...


(எனது கைபேசி (CELL PHONE) கடந்த ஞாயிறு அன்று இரவு மதுரை வருகையில் சேலம் பேருந்தில் தொலைந்து விட்டது .அதை ஒட்டி நான் எழுதிய கவிதை இது )

Monday, January 31, 2011

தமிழா ! தமிழா !

மீன் பிடிக்க
சென்ற எம்
தமிழனை மீனவனை மீன்
போல கொத்தி சுருக்கு கயிறு
மாட்டி கொன்ற அற்ப பதர்களே !
எம் தமிழனை கொன்றால்
யார் கேட்பார் என நினைத்தீர்களா ?
உங்களை சொல்லி குற்றமில்லை

கடிதம் எழுதுவதும்
கட்டி அணைத்து
கண்ணீர் துடைப்பது போல
நடிப்பதும் மட்டுமே எங்கள்
அரசியலார்களின்
வேலை என்பதை
தெரிந்து இருக்கிறீர்கள்

தமிழன் கேவலபடுவதும்
தமிழ் கேவலபடுவதும்
எங்களுக்கு புதிதல்ல
என்று நினைத்தீரோ !

ஈழ தமிழனை சாக
விட்டு வேடிக்கை பார்த்த
இந்தியா அரசு இதிலும்
வேடிக்கை பார்க்கிறதே !

ஆஸ்திரேலியாவில்
சில மாணவர்கள் தாக்க பட்டதற்கே
துடிதுடித்தீரே நாங்களும்
இந்தியர் தானே பிறகேன் இப்படி?


(இந்த கவிதையை எழுத தூண்டிய அன்பர் செந்தழல் ரவிக்கு நன்றி ! மேலும் மீனவர் பிரச்சனை பற்றி அறிந்து கொள்ள கிளிக்குங்கள் )







Friday, January 28, 2011

Thursday, January 27, 2011

இது யாதெனில் ...
















இறக்கி வைக்க
முடிவதில்லை
இச் சுமையை...



எளிதில்
துறக்க முடிவதில்லை
இச் சுமையை ...

பத்து மாதத்தோடு
முடிவதில்லை இது
எதற்கும் பயன்படாது
என நினைதேன் -ஆனால்
பயன்படுகிறது என் குழந்தைக்கு
கார் ஓட்ட ..
என் தொந்தி ...

Saturday, January 22, 2011

மக்கள் சேவையில் நான் ..






(கடந்த டிசம்பர் 2010 பாரத ஸ்டேட் வங்கி (STATE BANK OF INDIA) திருச்சி கைலாசபுரம் கிளையில்  பணியில் நான் சேர்ந்த போது பயிற்சி மையத்தில் நான் வாசித்த கவிதை இது.. பாரத ஸ்டேட் வங்கி பற்றிய உங்கள் கருத்துக்களும் வரவேற்க்கபடுகின்றன .. )


கிளை
இல்லா
மரம் உண்டு
பாரத ஸ்டேட் வங்கி
கிளை இல்லா ஊர் உண்டா?

கடல் நடுவே காசில்லாமல்
கலங்கி நின்றாலும்
காப்பாற்றும் பாரத ஸ்டேட் வங்கி
ATM மூலம் ...


கல்வி நிலையம்
இல்லா ஊரிலும்
பாரத ஸ்டேட் வங்கி
ATM உண்டு ..

வாடிக்கையாளர்
திருப்தியே முதன்மையாய்
கொண்டதால் தான்
முதலிடம் பெற்றதா
இவ்வங்கி ?

இந்தியாவில் மட்டுமல்ல
உலகிலும் முதலிடம்
விரைவில் கிடைக்கும்
என்ற நம்பிக்கையில்
உங்கள் வாடிக்கையாளன்
இப்போது உங்கள் ஊழியனாய் ...

மாது விலைக்கு ...























கசக்கி எறியப்படும்
மலர்கள் நாங்கள்

சதைகளை தின்னும்
மனிதர்கள் போல்
எங்களையும் தின்பார்கள்
காம அரக்கர்கள்

எங்கள் அங்கங்கள்
அவர்களின் விளையாட்டு
மைதானங்கள் -விருப்பம்
போல் விளையாடுவர் நாங்கள்
விரும்பா விட்டாலும் ...

எங்களை நேசிப்பார் யாருமில்லை
பூஜிப்பார் யாருமில்லை
அவசர தேவைக்கு
விற்கப்படும் பொருள் நாங்கள் ...

நாங்களும் மாது தான்
ஆனால் விலைக்கு ...